ஜனநாயகப் பதம் திரிக்கப்பட்டுள்ளதாம்! கூறுகிறார் கோத்தா

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தா விட்டால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என்று ஜனாதிதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் பேசும் போதே இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. நாட்டிற்கு பாதுகாப்பு என்பது எந்தளவு முக்கியமானது என்பதை குறித்து நாட்டின் ஆட்சியாளருக்கு போதிய அறிவு இருக்க வேண்டும்.

இந்த நிலையில், நாட்டின் புலனாய்வுத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த அரசின் செயற்பாடுகளினால், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பதங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. என்றார்

No comments