மட்டக்களப்பில் கோர விபத்து இருவர் பலியாகினர்

மட்டக்களப்பு, ஏறாவூரில் இருந்து கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவின் நாவற்குடா பிரதான வீதியில் இன்று (11) காலை மணல் ஏற்றி வந்த டிப்பர் டயர் வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கோழி ஏற்றி வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது இரண்டு பேர் ஸ்த்தலத்தில் பலியாகினர் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் ஒருவய் தைக்கா வீதி, ஏறாவூர், 01ஐ சேர்ந்த வ.ஹி. ஹசன் (25) என தெரியவந்துள்ளது.

No comments