முகநூல் பதிவிற்காக பொங்கிய சத்தியமூர்த்தி?


யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ந.சத்தியமூர்த்தி தன்னை பற்றி முகநூலில் பதிவிட்ட ஆசிரியர் எதிராக நடவடிக்கையெடுக்க கோரியுள்ளார். இறுதி யுத்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி  பொய் கூறியது சம்பந்தமாக தான் எழுதியதற்காக மாகாண கல்வி அமைச்சுக்கு நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியிருப்பதாக கிளிநொச்சியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக ந.சத்தியமூர்த்தி கிளிநொச்சியை முன்னிறுத்தி அரசியல்களங்களில் தரை இறங்கிவருகின்ற நிலையில் அவரது பணி தொடர்பில் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சரின் ஆசீர்வாதம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை பெற்றுக்கொண்ட விவகாரம் ஓயுமுன்னர் தற்போது சமூக ஊடக பதிவிற்காக நடவடிக்கை எடுக்க வடமாகாண கல்வி திணைக்களத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இறுதி யுத்த காலத்தில் அர்ப்பணிப்புள்ள மருத்துவ பணியாற்றிய அவர் பின்னர் படையினரால் கைதாகி முரண்பட்ட தகவல்களை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.

No comments