பதவியை பறித்தார் மைத்திரி?


வடக்கிற்கு வருகை தந்து திரும்பியுள்ள ஜநா அறிக்கையாளர் தொடர்பில் கொழும்பில் தொடர்ந்தும் கொதி நிலையே நீடிக்கின்றது.

இலங்கை தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், சிறிலங்காவின் நீதிபதிகளைச் சந்திக்கவிருந்த நிலையில், அதனை தடுக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சியினர் கோரினர்.

அதற்கமைய, அந்தச் சந்திப்பை நிறுத்துவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்தநிலையில்,மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், வெளிவிவகார அமைச்சின் பதில் செயலராகவும், மேலதிக செயலராகவும் உள்ள அகமட் ஜவாட்டை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சபாநாயகர் கரு ஜெயசூரியவும்,  வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை அழைத்து, எதிர்க்கட்சியினரின் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜநா அறிக்கையாளர் வடக்கிற்கு வருகை தந்திருந்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள்,ஊடகவியலாளர்கள் என பலரையும் சந்தித்து கொழும்பு திரும்பியிருந்த நிலையில் தெற்கின் பார்வை அவர் மீது சென்றுள்ளது.

.

No comments