விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களுக்கு பாடசாலையில் மக்கள் அஞ்சலி!

மாங்குளம்,மல்லாவி,பாண்டியன்குளம்,வவுனிக்குளம் பகுதிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நேற்று முன்தினம் மாலையில் இடம்பெற்ற விபத்தில்  உயிரிழந்த மு/பாலிநகர் மகாவித்தியாலய மாணவர்களான ஜீவகுமார்- ஜினேஷ்குமார் மற்றும் குணாளன் டிஷாந்தன் ஆகிய இரண்டு மாணவர்களின் புகழுடல்கள்  மக்கள் அஞ்சலிக்காக பாடசாலையின் வளாக  முன்றலில் மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் பாடசாலைக்கு எடுத்துவரப்பட்டு  வைக்கப்பட்டிருந்தது.


பாலிநகர் மகாவித்தியாலய அதிபர் பிரேம்சங்கர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  ஈகை சுடரினை சம்பவத்தில் உயிரிழந்த  மாணவர்களின் உறவுகள் ஏற்றி வைக்க, தொடர்ந்து பழைய மாணவர் சங்க தலைவர், மற்றும் அதிபர்  ஆசிரியர் , மாணவர்கள் ஏற்றி வைத்தனர்.மாணவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன

தொடர்ந்து அஞ்சலி உரைகளும், மலரஞ்சலி நிகழ்வுகளும், இடம்பெற்றன.

தொடர்ந்து  பலநூற்று கணக்கான மாணவர்கள் அதிபர் ,ஆசிரியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்







No comments