இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!
இராமேஸ்வரத்தில் இருந்து துரைசிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில் பெனட்டிக்,அன்னாசி,நாகராஜ் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு கோளாறு காரணமாக படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்கு பதிவு செய்து படகில் இருந்த ஏழு மீனவர்களையும் படகையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Post a Comment