ரஷ்ய விமானங்கள் அகோரக் குண்டுவீச்சு, 50 பொதுமக்கள் பலி!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மாராத் அல்-நுவான் நகரத்தில் உள்ள பொதுமக்கள் கூடும் சந்தை மீது ரஷ்ய விமானங்களின் குண்டு வீசியதில் 50 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய Observatory-ன் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த விமானக் குண்டு  தாக்குதலில் குறைந்தது 45 பேர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். காயமுற்றவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர், இன்னும் சில மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட போர்க் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

No comments