பயண முகவர்களால் கைவிடப்பட்டு இறந்த தமிழரை அடையாளம் காண உதவுங்கள்!

இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும்.

காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.

அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுங்கள்.

No comments