பதவிக்காலம் எப்போது முடியும் - தடுமாறும் மைத்திரி

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கிறது ? அது எப்போது முடிவடைகிறது ? என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த தினமான 2015 மே 15 ஆம் திகதியே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது பதவிக்காலம் 2020 இல் முடிவடைவதாக கருதும் ஜனாதிபதி அதனை விளக்கி கூறுமாறே உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கவுள்ளார்.
ஜோதிட ஆலோசனைகளின்படி வரும் 11 ஆம் திகதி இதற்கான கடிதத்தை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பவுள்ளார் ஜனாதிபதி.
ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் இவ்வருடம் முடிவடைவதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீண்டும் இவ்வாறு விளக்கம் கோரவுள்ளமை அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments