கோத்தாவை அழைத்துவர செல்கின்றது குழு?

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (03) சிங்கப்பூர் சென்றுள்ளது.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவே, குறித்த குழுவினர் பயணித்துள்ளனர் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகமகே, பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணவீர, இந்திக அனுருத்த, கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அடங்கிய குழுவினரே, சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

No comments