முக்கொம்பன் சுற்றி வளைப்பு?


கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமம் இன்று(06) சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் பத்து மணி வரை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இச் சுற்றி வளைப்பில் ஈடுப்பட்டிருந்தனர். முக்கொம்பன் கிராமத்தின் பத்து வீட்டுப் பகுதி பிரதேசமே இவ்வாறு சோதனைக்குட்ப்பட்டுள்ளது.
இன்றைய தினம்  இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளும், தேடுதல்களும் தற்போது இல்லாதிருந்த நிலையில் இன்றைய தினம் முக்கொம்பன் கிராமம் படையினரால் சோதனைக்குட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments