தொடங்கினார் விஜயகலா தனது ஆட்டத்தை..?


வடக்கில் கூட்டமைப்பு போல திருத்த முடியாத அரசியல்வாதியாக இருப்பவர்களுள் விஜயகலா மகேஸ்வரனும் ஒருவர்.முட்டாள்தனமாக கதைப்பதும் பின்னர் விழிபிதுங்க நிற்பதும் அவரது வழமையாகும்.

வட மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தேக்க நிலையில் அடுத்த தேர்தலிற்காக அவர் கடை விரித்துவருகின்றார்.

அவ்வகையில் ரணில் தரப்பு வாக்கிற்கான துருப்பு சீட்டாக்கியுள்ள சமுர்த்தி நிவாரணத்துடன் தற்போது விஜயகலா மகேஸ்வரன் போட்டுவரும் ஆட்டம் அனைத்து தரப்பினதும் விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது. 

இராஜாங்க அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருத்து வெளியிட்டதை அடிப்படையாகக் கொண்டு அவரது பதவியை பறி;த்திருந்த போதும் அடுத்த தேர்தலிற்கான வாக்கிற்காக ரணில் விஜயகலாவின் அட்டகாசத்தை கண்டுகொள்ளாதிருப்பதாக சொல்லப்படுகின்றது.

நேற்று முன்தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் தனது ஆதரவாளர்களினை சமுர்த்தி பட்டியலில் இணைக்கவில்லையென விஜயகலா சன்னதமெடுத்து ஆடியதாக அதிகாரிகள் குசுகுசுக்கின்றனர்.

பிரதேச செயலரான பெண் அதிகாரியை கூட ஒருமையில் அழைத்து பொதுமக்கள் மத்தியில் திட்டியதாக சொல்லப்படுகின்றது.

ஒருபுறம் கூட்டமைப்பின் சரவணபவன் தனத கடையினை விரித்துவைக்க மறுபுறம் போட்டியா கவிஜயகலாவும் களம் இறங்கியுள்ளார்.
இனி தேர்தல் காலமாகையினால் நடக்கப்போவது தொடர்பில் அதிகாரிகள் அச்சத்துடன் காலத்தை கழிக்க தொடங்கியுள்ளனர்.

No comments