நவம்பரில் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல்?



ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னராக நாடாளுமன்ற தேர்தலை நடத்த மைத்தரி முற்பட்டுள்ள நிலையில் நவம்மர் மாதம்; தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு நவம்பர் மாதத்தில் மூன்று திகதிகள் தேர்வு செய்யப்பட்டு அத் திகதிகளிற்கான நிகழ்ச்சி நிரலையும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தயார் செய்தது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் நடாத்த வேண்டியது சட்ட ஏற்பாடாகவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதற்காகவே முதல் கட்டமாக மூன்று தினங்கள் தேர்வு செய்யப்பட்டதோடு அந்த மூன்று தினங்களிற்கான பணிகளிற்குரிய அட்டவணையும் தயார் செய்யப்பட்டது.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட மூன்று அட்டவணைகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இறுதி செய்யப்பட்டு தேர்தலிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கும் சமயம் இதில் ஓர் திகதி உறுதி செய்யப்பட்டு அவ்வாறு உறுதி செய்யப்பட்ட திகதிக்கான அட்டவணைக்குரிய பட்டியல் நடைமுறைப் படுத்தப்படும்.

இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவானது தற்போது நவம்பர் மாதம் 16 , 23 , 30 ஆகிய திகதிகளை தற்போது இனம் கண்டுள்ளனர். இத் திகதிகளில் ஓர் தினத்திலேயே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments