தேங்காய் உடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் நாளை 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா   மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், பொது அமைப்புகளும் இணைந்தே இப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள 108 தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் சமூக ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments