சங்கிலியனின் மறைவின் 400 ம் ஆண்டு!


சங்கிலிய மன்னனின் 400 ஆவது நினைவு நாளான எதிர்வரும் திங்கள்கிழமை (26) இலங்கையில் பல இடங்களில் மன்னன் சங்கிலியன் நினைவுக்குழு சார்பாக நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக ஈழம் சிவசேனைக் கட்சியை தலைவர் க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (23) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 440 ஆண்டுகளுக்கு முன்னர் 1619 இல் சங்கிலியன் வீழ்ந்தநாள் இன்றைய 2019 ஆம் ஆண்டு 400 ஆவது ஆண்டு ஆகும். இதனை நினைவு கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் யமுனை ஏரியில் -யமுனை ஆற்று நீர்- காவிரி ஆற்று நீர் கலத்தல் நிகழ்வு ஆரம்பமாகும்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள 13 இடங்களான கிளிநொச்சியில் சிவகங்கையிலும் கந்தன் குளத்திலும் - முல்லைத்தீவில் நந்திக்கடலிலும் - வவுனியாவில் கற்குளத்திலும் - மன்னாரில் பாலாவியிலும் - அநுராதபுரத்தில் தேவநம்பியதீச வாவியிலும் - திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றிலும் - நுவரெலியாவில் அடிவார அருவி சிவனொளிபாதமலையிலும் - கற்றன் துர்க்கை அம்மன் ஆலயத்திலும் - அம்பாந்தோட்டையில் கதிரமலைக் கந்தன் சிவன்கோயிலிலும்- அம்பாறையில் அருள்மிகு சித்திரவேலாயுதர் கோயில் கடலிலும் - வதுளையில் அருள்மிகு சித்திவிநாயகர் கோயில் ஆற்றிலும் - புத்தளத்தில் உடப்பு ஆண்டிமுனை மாரியம்மன் ஆலயத்திலும் உள்ள நீர் நிலைகளில் நீர் கலத்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மறவன்புலோ சச்சிதானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments