சிலாபத்தில் பதற்றம்! ஒருவர் கைது! ஊடரங்கு அமுல்!



சிலாபத்தில் தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தியின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இளைஞர் குழு ஒன்றினால் குறித்த செய்தியின் உண்மைத் தன்மையை கூறுமாறு காவல்நிலையத்திற்கு அண்மையில் ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் அங்கு பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் மக்களைக் கலைக்க வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்கொள் கொண்டுவந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டு பதற்றம் மேலும்  அதிகரித்தது.

தற்போது நாளை காலை 6 மணி வரை காவல்துறையினரால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.





No comments