தமிழர் தாயகத்தில் கடை விரிக்க முற்படும் இராணுவம்!


தெற்கில் குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே தெற்கு குண்டுவெடிப்பினையடுத்து வடகிழக்கில் தமது இராணுவ நலன்களை பேணுவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளமை தெரிந்ததே.

No comments