ரிசாத்.ஹிஸ்புல்லாஹ் வெளியே?
கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சர் ரிசாத் பதியுதீனை அதனுடன் தொடர்புபடுத்தி சிங்கள அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார். மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஆளுனர் பதவியிருந்து நீக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை புதன்கிழமை அரச தலைவர் மைத்திரியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
Post a Comment