உலகின் வயதான மனிதர் உயிரிழந்தார்

உலகின் மிக வயதான மனிதரான அப்பாஸ் இலியிவ் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் இங்குஷெத்தியாவில் 1896 ஆம் ஆண்டு  பிறந்த அப்பாஸ் இலியிவ் தனது 123 வயதில் உயிரிழந்துள்ளார்.

1917 முதல் 1922 வரை ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றினார்.

உழவூர்தி ஓட்டுநரான அப்பாஸ் பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்தவர்.


ஒரு நாளைக்கு 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர். மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாது இருந்தவர்.

குறிப்பாக அவர் சாகும் வரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. 

அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments