‘எமக்கும் சந்தர்ப்பம் வரும்’ - முகநூலில் பதிவிட்டவர் கைது


‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார்’ என தமிழ்மொழில் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments