சலுகைக் கடன்! விழிப்புணர்வு ஊர்வலம்!

வவுனியாவில் என்ர பிறைஸ் சிறிலங்கா என்ற சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வவுனியாவில் இடம்பெற்றது.

இக்கடன் திட்டத்தின் கீழ் வட்டி முழுவதையும் அரசாங்கம் செலுத்தும் வகையில் மாத்ய அருண, திரிசவிய, எரம்புவ கடன் திட்டங்களும், வட்டியில் முக்கால்வாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரியசக்தி, கொவிநவோதய கட்ன் திட்டங்களும், வட்டியில் அரைவாசியை அரசாங்கம் செலுத்தும் வகையில் ரன் அஸ்வென்ன, ஜய இசுர உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சலுகைகக் கடன் திட்டம் தொடர்பான சுலோக அட்டைகளை ஏந்திய வாறும், கோசங்களை எழுப்பியவாறும் வெற்றியின் பேரணி எனும் பெயரில் நகர வீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

கடன் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

No comments