வவுனியா வரையில் கடுகதி புகையிர சேவை?


கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம்(13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments