லண்டனில் கைதான 4 இலங்கையர்களும் விடுதலை!

லண்டன் லூட்டன் வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் லண்டனின் லூட்டன் வானூர்தி நிலையத்தை சென்றடைந்தபோது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.

நால்வரிடமும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments