இழுத்துப் பிடிக்கும் ரசிகர்கள்! மீண்டும் சங்கூதினார் ரஜனி!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இன்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜனி ரசிகர்கள் “அடுத்த ஓட்டு ரஜினிக்கே”  பொருள் சொல் முன்னிலையாகி வருகிறது இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் கண்டிப்பாக அரசியலில் குதிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில்,
தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே நடந்துள்ளது. இது குறைந்துள்ளதற்கு என்ன காரணம்?
70 சதவீதம் என்பது ஓ.கே.தான். சென்னையில்தான் 50 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது. தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் நிறைய பேர் வெளியூர்களுக்கு போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வெயில் அதிகமாக இருந்ததும், அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்காததும் வாக்குப்பதிவு குறைவுக்கு காரணமாக இருக்கிறதா?
அது கண்டிப்பாக தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டிய விஷயம்தான்.

தேர்தலுக்கு பின்பு எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்று சொல்கிறார்களே?
மே 23ம் தேதிக்கு பிறகு பார்ப்போம்.

 மோடியே மீண்டும் பிரதமராக வருவாரா?
மே 23ம் தேதி தெரிந்து விடும்.
 நீங்கள் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதாக சொன்னீர்களே?
தேர்தல் வரட்டும். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்.
சட்டசபைக்கு எப்ப தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?
எப்ப, எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்
இவ்வாறு கூறினார் ரஜினிகாந்த்

No comments