சிற்றூர்தி மோதியது! வீதியில் செப்பனிட்டவர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சிற்றூர்த்தி ஒன்று வீதியில் செப்பனிடும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நொச்சியாகமம் மற்றும் அநுராதபுரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் நடந்துள்ளது.

வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

வீதி செப்பனிடும் பணிகளுக்காகப் போடப்பட்டிருந்த குறியீட்டுத் தடைகளையும் இடித்துக்கொண்டே சிற்றூர்தி வேலையாட்களின் மீது மோதியுள்ளது.

No comments