காலியான வெற்றிடத்திற்கு சம்பந்தனின் பெயர் பரிந்துரை!!

அரசியலமைப்பு பேரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, அதிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின்போது, குறித்த வெற்றிடத்திற்கு இரா. சம்பந்தன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் பதவி வகித்தபோது, தமது பதவிநிலை மூலம் அவர் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவும், பெயரிடப்பட்டிருந்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு பேரவையில், சம்பந்தனின் உறுப்புரிமை நீங்கியிருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகியதை அடுத்து, இரா. சம்பந்தன் பேரவைக்கு மீளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

No comments