பிரித்தானிய நாடாளுமன்றில் ஆடைகள் களைந்து போராட்டம்!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 11 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அமரும் பகுதியிலிந்த ஆர்ப்பாட்டக் காரர்கள்  ஆடைகளைக் களைந்து போராட்டத்தினை நடத்தினாரகள்.
ஆர்ப்பாட்டக்கார்கள் தங்கள் உடலில் "நேரத்தை வீணடிக்க வேண்டாம்" போன்ற வாசகங்களை எழுதியிருந்தனர்.
அரசாங்கம் சுற்றுச்சூழல் தொடர்பான அவசரத் தேவைகளைப் புறக்கணித்து வருவதாகத் தெரிவித்தனர்.
பிரெக்சிட் தொடர்பான விவாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரத்தை விரயமாக்குவதாகவும், நாட்டின் மற்ற பிரச்சினைகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியூள்ளனர்.

No comments