தெருக் காவாலியாக மாறிய பிரதேச சபை உறுப்பினர்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினா் ஒருவா் பொதுமகன்கள் இருவா் மீது தாக்குதல் நடாத்தியுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு இன்று நீதிமன்றில் எடுக்கப்பட்டுள்ளது. 
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, முப்புரம் வட்டாரத்தில் நேற்று தமிழரசு கட்சியின் மூலக்கிளை தெரிவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மூலக்கிளையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
இதில் முப்புரம் வட்டாரத்தினை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் தோல்வியுற்றுள்ளார்.
இதன் பின்னர் பிரதேச சபை உறுப்பினருக்கும் பொதுமகன் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடு இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பிரதேச சபை உறுப்பினர் அவ்விருவரையும் தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினரை கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

No comments