மரணதண்டனைக்கு மைத்திரி தயார் - பட்டியல் தயாரானது

மரண தண்டணை விதிக்கப்படவேண்டிய போதைப் பொருள் கடத்தல்காரா்களின் பெயா் விபரம் தன்னிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.

இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.

யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என அவர் கூறியிருந்தார்.

அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியியுள்ளார்.

அத்தோடு அது தொடர்பில் விரைவில் அறிவிக்கபடுமென்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையிலேயே தற்போது மரண தண்டனை வழங்கவுள்ள வர்த்தகர்களின் பெயர் விபரங்கள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக

அவர் அறிவித்துள்ளார்.

No comments