வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக யாழில் பல இலட்சம் பண மோசடி

இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் இடைப்பட்ட  சந்தியில் உள்ள வீடொன்றில் வழிகாட்டல்  நிறுவனம் நடத்தி வருகிறார்.

“யாழ்ப்பாணத்தில் இளையோருக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிறுவனத்திடம் பல லட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி வேலைவாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அத்துடன் இன்றும்  (02) நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம்,  நிறுவனத்தின் இயக்குனர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

No comments