கூட்டமைப்பு எம்பிக்கள் கோயிலில்: சிங்கள எம்பிக்கள் மக்களிடம்?


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோயில்களிற்கு வீதி அமைப்பது தீர்த்தக்கேணிகளை இறைத்துக்கொடுப்பதென அலைந்து அடுத்த தேர்தலிற்கான வாக்கு வேட்டையில் மும்முரமாக அரசின் வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சர்  சஜித்பிரேமதாசவோ வன்னியில் வீடமைத்துக்கொடுக்க களமிறங்கியுள்ளார்.

இலங்கை அரசின் நாடு பூராகவும் 150கிராமங்கள் என்னும்  திட்டத்தின் ஊடாக பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முல்லையடி மற்றும் இயக்கசச்சி பகுதிகளில் 32 வீடுகள் அமைத்துவழங்கப்படவுள்ளது.

அவ்வகையில் மூன்று வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று  இக் கிராமங்களில் இடம்பெற்றுள்ளது. இவ் நிகழ்வின் போது இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து கொண்டர். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரால் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய்க்கான  காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments