வடக்கிற்கு அனுராதபுரத்திலிருந்து குடிநீர்?


இரணைமடுவிலிருந்து யாழிற்கு குடிநீர்,மகாவலி கங்கை நீரென ஆரம்பித்த குடிநீர் பயணம் தற்போது மத்திய மாகாணத்திலிருந்து குழாய் வழி நீரை கொண்டுவருவது வரை பயணித்துள்ளது.வடக்கு ஆளுநரருக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவருக்;குமிடையே இன்று மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விவகாரம் ஆராயப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது ஆளுநரால் கோரப்பட்டதாக தெரியவருகின்றது.

இதற்கு சாதகமான சமிக்கை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஈரானின் மூன்று நிறுவனங்களை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டதாதகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் அனுராதபுரத்திலுள்ள குளத்திலிருந்து நீர்விநியோகிக்க புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

No comments