மல்லாவியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!


வன்னியின் மல்லாவி – எருவில் பகுதியிலிருந்து துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைதாகியுள்ளார்.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் எருவில் – நட்டாங்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டில் வேட்டையாடவென குறித்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments