731 நாள் தாண்டிய நிலமீட்புப் போராட்டம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்,

02.03.2019 இன்றைய நாள் 731ஆவது நாளில் அடையாள உண்ணாவிரத்துடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் வடமாகாண முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் மக்களுடன் இணைந்திருந்தனர்.



No comments