புலம்பெயர் தமிழரிடம் 55 இலட்சத்தைச் சுருட்டிய பெண் தலைமறைவு

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்யை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மனி நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழாிடமிருந்து 55 லட்சத்தைச்  சுருட்டிக் கொண்டு காதலி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் காதலியை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறி கொடுத்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடார்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் வாழ்வதாகக் கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மனி நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை காதலித்துள்ளார்.

அதனை நம்பி குறித்த புலம்பெயர்  தமிழர்  கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குக் கடந்த தை மாதம் வந்துள்ளார் . அவருடன் அவருடைய முகப்புத்தகக் காதலியும் வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர் .

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர்  திடீரென ஒருநாள் முகப்புத்தகக் காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார்  55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார் .

இதனையடுத்து  பாதிக்கப்பட்டவர்  கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

ஆசிரியர் குறிப்பு - பெண்ணின் படம் அடையாளம் காண உதவுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

No comments