மன்னாரில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்க அனுமதியில்லை!


மன்னார் புதைகுழி பற்றிய காபன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்து கால வரையறையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லையென காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாளிய பீரிஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய காபன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாளிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதை குழி தொடர்பாகவும்,காபன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை இன்று வெள்ளிக்கிழமை (22) மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சந்தித்திருந்தார்.

மன்னார் மனித புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் காபன் பரிசோதனை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. எனினும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்து கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்.மண் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட தடையப்பொருட்களின் ஆய்வுகளை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை வந்ததன் பின்னர் அணைத்து அமைப்புக்களும் இணைந்து ஒரு பொருத்தமான முடிவுக்கு வர முடியுமென தெரிவித்துள்ளார்.

எனினும் இழப்பீடுகளோ அல்லது உதவித்திட்டமோ எமக்கு வேண்டாம்.காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை என கலந்து கொண்ட பொது அமைப்புக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments