பாகிஸ்தானில் எரிவாயு குழாய்த் தகர்ப்பு! பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு!


பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து
பிற பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள குழாய் மர்ம நபர்கள் தகர்த்துள்ளனர் இதனால் பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும்  ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. 


இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வரும் பலூச் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

No comments