படகு விபத்து 92 பேர் பலி!

ஈராக் நாட்டின் குர்திஷ் இன மக்கள் தங்கள்  புத்தாண்டை கொண்டாடும் விதமாக  150க்கும் மேற்பட்டோர் கேளிக்கை பயணமாக ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்ற போது  அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 92 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் மற்றும் 60 மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments