கிளியில் தமிழரசும் மகளிர் மாநாடு நடத்துகின்றது?


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரிவும் மகளிர் 2019ஆம் ஆண்டுக்கான பெண்கள் எழுச்சி நாளை கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

“வையகம் நோக்கிய வனிதையர் குரல்’ என்னும் தொனிப்பொருளில் எதிர்வரும் 08 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, பி.ப.1.00 மணிக்கு கரைச்சி பிரதேசசபையின் மாநாட்டு மண்டபத்தில், கரைச்சி பிரதேசசபை உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் செயலாளருமான திருமதி.கலைவாணி சிறீகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக சயந்தனின் ஆதரவாளரான சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி.சிவமங்கை இராமநாதன் அவர்களும், பருத்தித்துறை பிரதேசசபையில் வெள்ள நிவாரணத்தை சுருட்டியதாக கூறி பதவியிழக்க வைக்கப்பட்ட உபதவிசாளர் திருமதி.மதினி நெல்சனும்;, சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி திருமதி விஜயராணி சதீஸ்குமார், சட்டத்தரணி செல்வி தர்சா இராசமகேந்திரன் ஆகியோரும்; கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments