விழா எடுத்த விபத்துப் பிரிவு வேலைகள் பூர்த்திசெய்யாததால் கிடப்பில்

சாவகச்சோி பொது வைத்தியசாலையில் பெருமெடுப்பில் அமைக்க தொடங்கிய விபத்து சிகிச்சை பிாிவின் வேலைகள் பூா்த்தியாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தொடா்பில் பொதுமக்கள் கவலை தொிவித்துள்ளனா்.

சுகாதார அமைச்சினால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ 9 முதன்மைச் சாலையுடன் இணைந்துள்ள சாவகச்சேரி ஆதார மருத்துவமனை மற்றும் வவுனியா பொது மருத் துவமனை ஆகியவற்றில் அவசர விபத்து சிகிச்சை பிரிவுகள்

அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சாவகச்சேரி மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவு வேலைகளின் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்ட போதிலும், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் இன்னமும் வந்து

பொருத்தப்படாததால் சிகிச்சைப் பிரிவுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. சா லை விபத்துகளில் காயமடைவோர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக

கொண்டு செல்லப்படுகின்றனர். யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டு அவசர விபத்துப் பிரிவுக்கு நோயாளர்களை கொண்டு செல்ல எடுக்கும் அ ரைமணி நேரத்தில், சாவகச்சேரி மருத்துவமனை

அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவு இயங்குமாயின் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியுமென பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments