புலிகள் பயங்காரவாதிகள் - வகுப்பெடுத்த ஆளுநர் சுரேன்

தமிழீழ விடுதலை புலிகளால் இயக்கப்பட்ட “ஊடக இல்லம்” இயங்கிய கட்டிடத்தினை தமக்கு பெற்றுத் தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளா்கள் விடுத்த கோாிக்கையினை நிராகாித்துள்ள ஆளுநா் சுரேன் ராகவன்,

விடுதலை புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அவா்கள் வழங்கிய காணிகள் மற்றும் கட்டிடங்களை மீள கேட்க முடியாது. எனவே இராணுவத்தை சந்தித்து பேசுங்கள் என ஆளுநா் கூறியிருக்கின்றாா்.

2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிவிடுத்தபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும் அதாவது நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும் எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்றும் கோரினார்.

 இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம் இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர். எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம்.

அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலார்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டிய போதே ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தார்.

குறித்த விடயம் தொடர்பாகன ஆளநரிடம் கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி, செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்யை எழுத்து மூலம் முனை்வைத்திருந்தனர்.

No comments