புத்தூர் – மீசாலை வீதியில் விபத்து - ஒருவர் பலி - முவர் படுகாயம்
மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (வயது-24) என்ற இளம் குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (வயது-24) என்ற இளம் குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment