பிரெக்சிட் விவகாரம்! 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேறினர்!

பிரெக்சிட் விவகாரம் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் தனிக்கட்சி எதுவும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இருந்து மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாம் என தெரிகிறது. யூத விரோத பிரச்சினையை சரிசெய்யாவிட்டால், ஏற்கனவே விலகிய 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைய விரும்புவது குறித்து யோசித்து வருவதாக இரண்டு எம்பிக்கள் கூறியுள்ளனர்.

முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

No comments