மீண்டும் துளிர்த்தது நம்பிக்கை?


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் சி.வி.விக்கினேஸ்வரன் இருவரும் இன்றைய கிளிநொச்சி போராட்டத்தி;ல் ஆளாளுக்கு கைகொடுத்து பேசிக்கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்முதலாக மக்கள் பிரச்சினைகளிற்கென போராட்ட களத்திற்கு இன்று களமிறங்கியுள்ளார்.அவர் இன்றைய கிளிநொச்சி போராட்டத்தில் களமிறங்கியிருந்த நிலையில் அவரை ஏற்கனவே போராட்ட களங்களில் முன்னின்று போராடும் கஜேந்திரகுமார் பெருமனத்துடன் வரவேற்றிருந்தார்.

தமிழர் அரசியல் பயணத்திற்கு தேசியம் சார்ந்த கட்சிகளது கூட்டிணைவு என்பது தமிழ் மக்களது கனவாகவே இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய கிளிநொச்சி சந்திப்பு அதிலும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போராட்டத்திற்கென வீதியில் இறங்கியுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டுடன் முன்னாள் முதலமைச்சரது பயணம் கவனத்தை ஈர்த்துமுள்ளது.   

No comments