பாராட்டினாராம் ரணில்?


போதைப் பொருள் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பாராட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லதிபுக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கடிதத்தில், போதைப் பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப் பொருள் குற்றச் செயல்களை நாட்டிலிருந்து துடைத்தெறிவதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதில் அண்மைக் காலமாக எஸ்.ரி.எப். படைப் பிரிவு முன்னெடுக்கும் வெற்றிகள் பாராட்டுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் துணிச்சல் மிக்க செயலைப் பாராட்டுகின்றேன். இப்படியான தைரியம் மிக்க பொலிஸ் அதிகாரிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் ஒரு சொத்தாகும்.
அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்ட பாரிய போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்ட அத்தனை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 

No comments