ஆடை முக்கியம்?


நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல்,  ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யாழ்  நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டியில் வீடு­களை அடித்து உடைத்­தமை, மற்றும்  வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை போன்ற  குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ் நீதி­ மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துள்ளப்பட்டது.

இதன்போது  சந்­தேக நபர்­கள் நேர்த்­தி­யாக ஆடை­கள் அணி­யாது, தலை முடி வெட்­டாது காணப்­பட்­ட­னர்.
அவர்­களை அவ­தா­னித்த நீதி­வான் நீதி­மன்­றுக்கு சமூ­கம் அளிக்­கும் போது ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்றும்,
ஒழுக்­க­மற்ற முறை­யில் வந்­தால் சந்­தேக நபர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

No comments