முண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு

மூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் பலரும் வருகைதந்து குறித்த நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர். அவர்களுடன் இணைந்து அனைத்து நிகழ்வுகளிலும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அதிலும் ரணில் நாடா வெட்டிய, திரை நீக்கம் செய்த, அடிக்கல் நாட்டிய நிகழ்வுகளில் ஏனைய அமைச்சர்களைத் தள்ளி முண்டியடித்துக்கொண்டு ரணிலுக்கு அருகில் நெருக்கமாக நின்று படங்களுக்குப் போஸ் கொடுத்ததையும் காண முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ரணிலுக்கு முண்டுகொடுப்பதாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இன்றைய அவர்களது செயற்பாடுகள் இதனைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

No comments