ரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்!


வடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்பாய்;ந்துள்ளார் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன்.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த ரணிலை வரவேற்க மாவட்ட செயலக பணியாளர்கள் தமிழ் பண்பாட்டின் பிரகாரம் பன்னீர் தெளிக்க முற்பட்டனர்.அப்போது தலையிட்ட வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் அது ரணிலிற்கு பிடிக்காது என தெரிவித்ததுடன் எமது கலாச்சாரத்தை அவருக்கு திணிக்க வேண்டாமெனவும் பாய்ந்து விழுந்துள்ளார்.

இதனிடையே பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கான முன் ஆயத்தக்கூட்டம் பிரதமர் ரணில் விக்கரமசிங்க் தலைமையில் நடைபெற்றது.

இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றிருந்தது.

No comments