திறன்பேசிகளைப் பயன்படுத்த ரஷ்யப் படையினருக்குத் தடை!

ரஷ்யப் படையினர் திறன் பேசிகளைப் (Smart Phone) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலம் ரஷ்ய நாடாளுமன்றின் கீழ் சபையில் முன்வைக்கபட்டது. இதற்கான விவாதங்கள் நிறைவடைந்த பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திறன் பேசிகள் தடை செய்வதற்கு ஆதரவாக 450 உறுப்பினர்களில் 400 மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் விளாடிமீர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.

ரஷ்யப் படைகள் தொடர்பான இரகசியஙகள் பொதுவெளியில் கசிவதால் திறன்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என படை அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இதன் அடிப்படையிலேயே நேற்று இச்சட்ட மூலம் ரஷ்ய நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

#Russia #Russia ban Smart phone

No comments