போராட்டம் நடத்திய பட்டதாரிகள் விரட்டியடிப்பு

வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை வீச்சுக்களை நடத்தினர்.

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் நடத்தப்பட்டது.
வேலையற்ற பட்டாரிகள் அனைவரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை வீச்சுக்களை முன்னெடுத்தனர். அதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

No comments